ADDED : பிப் 02, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குழந்தைகள் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் மகன் ஈஸ்வர், 13; இவர், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் அமலா குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி காப்பகத்தில் இருந்து திடீரென அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் எம்பெருமாள் அளித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனர்.