ADDED : செப் 25, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் கூத்தப்பாக்கம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ப்ராஸ் கிளை மாதாந்திரக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க உறுதிமொழி சங்கத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செல்வி வரவேற்றார். சங்க மாநில செயலாளர் திருமலை சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ஸ்ரீவத்சன், ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன், சம்பத் கருத்துரை வழங்கினர். நிர்வாகிகள் திருவேங்கடம், கணேசன், வெங்கட்ராமன், பாலகுரு, சித்ரா, அருணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் அக்., 13ம் தேதி சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு கூத்தப்பாக்கம் கிளை சங்கம் சார்பில் அதிக அளவில் பங்கேற்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.