/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்
/
பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.
கூத்தப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ராஜாராமன், சம்பத் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார்.
பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. பொருளாளர் கணேசன், சங்கரன், ராஜசேகர், செயற்குழு உறுப்பினர்கள் பாலகுரு, பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுச்செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.