/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேவாமந்திர் பள்ளியில் காலை உணவு திட்டம்
/
சேவாமந்திர் பள்ளியில் காலை உணவு திட்டம்
ADDED : ஆக 27, 2025 01:11 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் தேசிய தொடக்கப்பள்ளி மற்றும் சேவாமந்திர் அரசு உதவி பெறும்தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்க விழாநடந்தது.
வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணைச் சேர்மன் செழியன், கவுன்சிலர் தையல்நாயகி கணேசமூர்த்திமுன்னிலை வகித்தனர்.
திட்டத்தை பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் கலையரசன் துவக்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், முன்னாள் துணைச் சேர்மன் நடராஜன், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி வேல்முருகன், சரவணன், நிர்வாகிகள்புருஷோத்தமன், சரவணன், கோமு, சிவபாலன், அப்துல் அஜீஸ், ஜாபர் அலி, அலி அப்பாஸ், தலைமைஆசிரியர்கள் தனலட்சுமி, சுமிதா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகன் உட்பட பலர், பங் கேற்றனர்.