ADDED : செப் 11, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம், செப். 12–
வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் ஆய்வு செய்தனர்.
அப்போது, மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து உணவை தரமாகவும், சுவையாகவும் அரசு அறிவுறுத்தல் படி வழங்கவும், சமையல் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினர். வலியுறுத்தினர்.
மகளிர் திட்ட இயக்குனர் அரவிந்த், தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, பி.டி.ஓ., பார்த்திபன் உடனிருந்தனர்.
