/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் சிலைகள் உடைப்பு; விருத்தாசலத்தில் பரபரப்பு
/
கோவில் சிலைகள் உடைப்பு; விருத்தாசலத்தில் பரபரப்பு
கோவில் சிலைகள் உடைப்பு; விருத்தாசலத்தில் பரபரப்பு
கோவில் சிலைகள் உடைப்பு; விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : அக் 08, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் முத்து மாரியம்மன் கோவில் கோபுர சிலைகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் நேரு தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கோபுரத்தில் உள்ள அம்மன் சிலை மற்றும் சிங்கம் சிலைகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் இரவு நேரங்களில் போதை நபர்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றனர். போதையில் சிலையை உடைத்திருக்கலாம்' என்றனர்.