ADDED : மார் 06, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: கோவில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு - பாலுார் சாலையில் பல்லவராயநத்தம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் கரையில் வீரன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன், அதிகாலையில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் இருவர் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தினை திருடி சென்றனர்.
இதுகுறித்த சி.சி.டி.வி., வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
