ADDED : ஏப் 25, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கோவில் தர்மகர்த்தாவை தாக்கிய நால்வரில், சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 60. அப்பகுதி மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.
கடந்த 24ம் தேதி கோவில் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்த போது, அங்கு வந்த பெரியசாமி மகன்கள் சங்கர், 44, ராஜா, 37, உட்பட நால்வர், ஆபாசமாக திட்டி, சீனிவாசனை தாக்கினர்.
அதில், காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சீனிவாசன் மகன் ரமேஷ், 40, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கர், ராஜாவை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
