/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் ஊராட்சி துணை தலைவர் கோரிக்கை
/
பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் ஊராட்சி துணை தலைவர் கோரிக்கை
பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் ஊராட்சி துணை தலைவர் கோரிக்கை
பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் ஊராட்சி துணை தலைவர் கோரிக்கை
ADDED : பிப் 17, 2024 04:43 AM

பரங்கிப்பேட்டை அருகே பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் உடைந்து, விழும் அபாயம் உள்ளதால், புதிதாக அமைத்துத்தர வேண்டும் என, கொத்தட்டை ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் மெயின்ரோட்டில் இருந்து புதுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் உள்ளது.
இப்பாலத்தை, கே.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார், வேளங்கிராயன்பேட்டை கிராம மக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தரைப்பாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால், பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து, ஆங்காங்கே கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகிறது. பாலத்தை தாங்கி நிக்கும் துாண்கள் உடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது.
தற்காலிகமாக பாலத்தை தாங்கி பிடிக்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும், தரைப்பாலம் உடைந்து விழும் அபாயம் உள்ளது.
இதனால், 5 கிராம மக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே, பழுந்தடைந்துள்ள பக்கீங்காம் கால்வாய் தரை பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டிதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.