sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்

/

பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்

பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்

பஸ் டயர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்


ADDED : ஜன 10, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் டயர் வெடித்து, தடுப்புக்கட்டையில் மோதியதால், 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிதம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 1:00 மணியளவில், ஆம்னி பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது. ஜெயச்சந்திரன் என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். சிதம்பரத்தில் இருந்து புவனகிரி சாலை வழியாக சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.

இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, காயமடைந்த 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us