sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலூர் பகுதியில் ஆடிப் பெருக்கு

/

கடலூர் பகுதியில் ஆடிப் பெருக்கு

கடலூர் பகுதியில் ஆடிப் பெருக்கு

கடலூர் பகுதியில் ஆடிப் பெருக்கு


ADDED : ஆக 03, 2011 09:55 PM

Google News

ADDED : ஆக 03, 2011 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடலூர் பெண்ணையாறு மற்றும் கடற்கரையில் புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டனர்.

தமிழக பகுதிகளில் ஆடி பெருக்கு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நேற்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரை மற்றும் பெண்ணையாற்றங்கரையில் கூடினர். அங்கு வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, அவல், பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். சுமங்கலி பெண்கள் தாலிகளை புதிதாக மாற்றினர். இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை புதுமண தம்பதிகள் நீரில் விட்டனர். பின்னர் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையிலும் மற்றும் கடற்கரையிலும் அமர்ந்து குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர்.








      Dinamalar
      Follow us