/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி
/
நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி
ADDED : ஜன 09, 2026 06:41 AM

புவனகிரி: அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது
புவனகிரி அரசுப் பள்ளிகளை ஆதரிப்போம் அமைப்புடன், சிதம்பரம் தன்னார்வ அமைப்பும் இணைந்து , அரசுப்பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் ஈர்ப்போம் என்ற பிரசார இயக்கம் நடத்தி வருகின்றனர்.
கிராமங்களில் கல்விக்காக அரசு திட்டங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் நாட்காட்டியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தாண்டிற்கான நாட்காட்டியை புவனகிரி சொக்கன் கொல்லை பள்ளியில் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை அகிலா வரவேற்றார். புவனகிரி வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி வெளியிட்டார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுதர்சன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். கண்காணிப்பாளர் பொன்முடி நன்றி கூறினார்.

