sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 09, 2024 04:30 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

அண்ணாகிராமம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் செய்திக்குறிப்பு;

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் 6 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்.

நெற்பயிருக்கு சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது குத்தகைக்கு பயிர் செய்பவர்களும் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கபட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களிலும் காப்பீடு செய்யலாம்.

முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு பயிர் சாகுபடி அடங்கல் நகல், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், ஆகியவற்றை கொண்டு காப்பீடு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 548 ரூபாய் காப்பீடு தொகையாகும். சம்பா பருவத்தில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் நெல் பயிருக்கு காப்பீடு செய்வது அவசியம். வரும் 15ம் தேதி கடைசி நாள். விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us