sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மீன் கழிவுகள் கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்

/

மீன் கழிவுகள் கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்

மீன் கழிவுகள் கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்

மீன் கழிவுகள் கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்


ADDED : மே 02, 2025 05:22 AM

Google News

ADDED : மே 02, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: வெள்ளாற்றங்கரையில் மீன் கழிவுகளை கொட்டிய டாடா ஏஸ் வேனை பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடக்கிறது.

கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது என, இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நேற்று காலை 11:00 மணிக்கு, வெள்ளாற்றங்கரையில் மீன் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சென்று பார்த்தபோது, டி.என். 31 - பி.டி. 8079 பதிவெண் கொண்ட கூண்டு அமைத்த டாடா ஏஸ் வேனில் இருந்து கழிவுகள் கொட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.

இதையடுத்து டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொது இடத்தில் மீன் இறைச்சி கழிவுகளை கொட்டியதற்காக அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us