/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 09, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே முதியவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 75; இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, வயலுக்கு சென்ற சுப்ரமணியனை, சண்முகம் மனைவி காசிவள்ளி, மகன்கள் தினேஷ், சங்கர், பிரபாகரன் ஆகியோர் தாக்கியுள்ளனர். காயமடைந்த சுப்ரமணியன், குள்ளஞ்சாவடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், சண்முகம் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

