/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 06, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே தனியார் பஸ் கண்டக்டரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சீர்காழி, வடகால் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் புவனகிரி வழியாக சிதம்பரம் நோக்கிச் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். இரவு 7:10 மணிக்கு வடக்குத்திட்டை பஸ் நிறுத்தத்தில் ஏறிய நான்கு பேர் முன்விரோதம் காரணமாக விக்னேைஷ தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வடக்குத்திட்டை காளிதாஸ், மேலமணக்குடி நரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.