/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
/
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
ADDED : ஜன 15, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசிங்கு, 55; அதே பகுதியை சேர்ந்தவர் அவரது அண்ணன் கல்யாணசுந்தரம், 58; இருவருக்கும் பாகப்பிரிவினை சம்மந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
பொதுவில் உள்ள நிலத்தின் மோட்டார் ஒயரை கல்யாணசுந்தரம் அறுத்தார். தட்டி கேட்ட தனசிங்குவை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.
காயமடைந்த தனசிங்கு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில், கல்யாணசுந்தரம் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.