/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
/
கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : நவ 04, 2024 05:32 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பம் மேற்குதெருவை சேர்ந்தவர் நந்தகுமார்,27;இவர் நேற்று முன்தினம் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது நந்தகுமாரின் நண்பர் கவியரசன் வந்ததால்,நந்தகுமார் அதே பகுதியை சேர்ந்த தனவேல் வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனவேல் ஏன் என் வீட்டின் அருகில் நிற்கிறீர்கள் என கேட்டு ஆபாசமாக திட்டி இருவரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதில் பலத்த காயமடைந்த நந்தகுமார்,கவியரசன் ஆகிய இருவரையும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் தனவேல்,48;மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.