/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 31, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிறுமியை திருமணம் செய்த புகாரில் மாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லிக்குப்பம், மேல்பாதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்,29; இவருக்கும் திருமண வயது பூர்த்தியாகாத 17 வயது டிப்ளமோ மாணவிக்கும் கடந்த ஏப்., மாதம் திருமணம் நடந்ததாக சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
அதன்பேரில், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் இந்திரா நடத்திய விசாரணையில், குழந்தை திருமணம் நடந்தது தெரிந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று வழக்குப் பதிந்து ஜெயபிரகாஷ், இவரது தந்தை சேகர், வள்ளி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.