ADDED : நவ 01, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டதில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி, 57; அதே பகுதியைச் சேர்ந்தவர் லதா. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரல், பரங்கிப்பேட்டை போலீசார் லதா, ரவிச்சந்திரன், பிரவின்குமார், பிரபு, மதியழகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

