/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் பைப் தகராறு தம்பதி மீது வழக்கு
/
குடிநீர் பைப் தகராறு தம்பதி மீது வழக்கு
ADDED : ஜூலை 22, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : குடிநீர் பைப் போடுவதில் ஏற்பட்ட தகராறில் தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் தனவேல். அதே பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இருவருக்கும் இடையே குடிநீர் பைப் போடுவது சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் சத்யராஜ், இவரது மனைவி நிவேதா ஆகியோர் சேர்ந்து தனவேல் மனைவி சித்ராவை இரும்பு பைப்பால் தாக்கினர்.
இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில், சத்யராஜ், நிவேதா மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.