/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு
/
மாமியாரிடம் தகராறு மருமகள் மீது வழக்கு
ADDED : அக் 12, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு மாமியாரிடம் தகராறு செய்த மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன். இவரது மனைவி வித்யா, 27; கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 6ம் தேதி மாமனார் வீட்டிற்கு சென்ற வித்யா, அங்கிருந்த மாமியார் மாரிமுத்தாள், 79; என்பவரிடம் சீர்வரிசை பொருட்களை திரும்பக் கேட்டு வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசினார்.
புகாரின் பேரில், வித்யா மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.