/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
/
வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
ADDED : ஆக 01, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மனைவி நதியா,29; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த துரைராஜ், நதியா வீட்டினுள் அத்துமீறி நுழைந்தார்.
சத்தம் கேட்டு நதியா கூச்சலிடவே துரைராஜ் தப்பியோடினார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், துரைரான் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.