ADDED : ஏப் 04, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் ராமர் மனைவி இந்திராணி,43;இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார்,43;என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
சம்பத்குமார் பிரச்னைக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டியதை இந்திராணி தடுத்தார். ஆத்திரமடைந்த சம்பத்குமார், இந்திராணியை ஆபாசமாக திட்டினார். நடுவீரப்பட்டு போலீசார், சம்பத்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

