ADDED : ஏப் 01, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வீட்டின் கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மனைவி செம்மலர், 45; அதே பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இருவருக்கும் வீட்டின் கழிவுநீர் வெளியேறுவதில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செல்வராசு, செம்மலரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், அய்யாசாமி மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
