ADDED : ஏப் 11, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: ஆபாசமாக பேசிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். தாலுகா அலுவலகம் அருகே பேரளையூர் பழனிவேல் மகன் திருஞானம், 29, என்பவர், பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து திருஞானம் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.