/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : அக் 21, 2024 06:50 AM

கடலுார்: கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஊராட்சி தலைவர் ஏலக்கன்னி காசிநாதன் முன்னிலை வகித்தார்.
அப்போது, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஞானம், ரமேஷ், நந்தன், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர்கள் ஞானப்பிரகாசம், தமிழரசி பிரகாஷ், துணை தலைவர் ராஜா, நிர்வாகிகள் சிந்துநாதன், அழகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.