/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
/
பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு
ADDED : பிப் 24, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறியபாலம் கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தனர்.
பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பாலம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதில் பி.டி.ஒ.சங்கர், ஒன்றிய கவுன்சிலர் அருள்முருகன், தலைவர் செல்வராஜ் , சொரத்துார் ஊராட்சிமன்ற தலைவர் கவிதாஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.