/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களநாயகி அம்மன் கோவிலில் நாளை தேர்
/
மங்களநாயகி அம்மன் கோவிலில் நாளை தேர்
ADDED : மே 26, 2025 11:50 PM
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா நாளை 28ம் தேதி நடக்கிறது.
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷகம், பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.
கடந்த 20ம் தேதி முதல் தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், இரவு 8:00 மணிக்கு அங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
நாளை மறுநாள் 29ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 30ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

