sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ.7 லட்சத்தில் தேர் வடம் வழங்கல்

/

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ.7 லட்சத்தில் தேர் வடம் வழங்கல்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ.7 லட்சத்தில் தேர் வடம் வழங்கல்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ரூ.7 லட்சத்தில் தேர் வடம் வழங்கல்


ADDED : டிச 16, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு பயன்படுத்தும், புதிய வடத்தை, பக்தர் ஒருவர் பொதுத்தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் விழாக்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்விரு விழாக்களின்போதும், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளின் வழியே தேரோட்டம் நடக்கும். இந்த தேரோட்டத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் தனித்தனி தேர்களில் வீதியுலா வருவர்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வரும், ஜனவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தேர் திருவிழாவிற்கு, சிதம்பரம் மூர்த்தி கபே உரிமையாளர் மோகன், அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் 40 டன் எடையுள்ள தேங்காய் நாரில் தயார் செய்த புதிய வடத்தை வழங்கினார்.

அதில், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் ஆகிய 3 தேர்களுக்கு தலா 460 அடி நீளம், சண்டிகேஸ்வரர் தேருக்கு 180 அடி நீளமுள்ள வடத்தை கோவில் பொது தீட்சிதர்களிடம் வழங்கினர். வடத்திற்கு பொது தீட்சிதர்கள் பூஜை செய்து, நான்கு வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து பெற்றுக்கொண்டனர். அதன் மதிப்பு 7 லட்சம் ரூபாய்.






      Dinamalar
      Follow us