ADDED : அக் 29, 2025 09:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடலுார் மாவட்டம், பண்ருட்டி சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்,38; சமையல் கலைஞர். இவர், நேற்று முன்தினம் கன்னியகோவில் பகுதியில் சமையல் வேலை முடித்து விட்டு இரவு 7:00 மணிக்கு அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பல்சர் பைக் மோதியது. இதில், அரிகிருஷ்ணன், பைக் ஓட்டி வந்த கடலுார் அடுத்த அன்னவெளியை சேர்ந்த தமிழ்வளவன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதித்தில், அரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தமிழ்வளவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

