sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது

/

வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது

வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது

வாகனம் விற்பனை செய்வதாக மோசடி : சென்னை ஆசாமி கைது


ADDED : ஆக 05, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் வசந்தகுமார், 21; இவர், 'ஓ.எல்.எக்ஸ்' என்ற 'ஆப்' பில் பழைய இரு சக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக வெளியான விளம்பரத்தை பார்த்து அதற்குரிய பணத்தை அடையாளம் தெரியாத நபருக்கு ஆன்லைன் மூலம் 12,500 ரூபாய் அனுப்பினார். ஆனால் வாகனம் அனுப்பப்படவில்லை.

இதேபோன்று, ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம் வேல்முருகன் மகன் விஜயகுமார்,27; என்பவர் 15,800 ரூபாயும், குறிஞ்சிப்பாடி, வடக்குத்து சக்திவேல்,24; என்பவர் 15,000 ரூபாய் செலுத்தியும் வாகனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரித்து, கடந்த மே 4ம் தே தி வேப்பூரைச் சேர்ந்த வெற்றிவேலை கைது செய்தார்.

இவர் அளித்த தகவலின்பேரில், சென்னை, அகத்தியர் நகரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் 39; என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. கோயம்புத்துார் மாவட்டம், குனியமுத்துார் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us