/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்
/
கடலுாரில் செயின் பறித்த சென்னை நபர் சிக்கினார்
ADDED : செப் 03, 2025 01:36 AM

கடலுார்:கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 67; ஆக., 31ம் தேதி வீட்டின் முன் நின்றிருந்த போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், ஆதிலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தார்.
ரெட்டிச்சாவ டி போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் ரெட்டிச்சாவடி போலீசார், புதுக்கடை புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் , சென்னை, ஆலந் துாரை சேர்ந்த குலாப் பாஷா, 42, என்பதும், பெரிய காட்டுப்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது . ஆக., 20ம் தேதி, சிதம்பரம் பஸ் நிலையத்தில் பைக்கை திருடி, கடலுார், புதுப்பாளையத்தில் மூதாட்டியிடம் செயின் பறித்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிராம் நகை, பைக்கை பறிமுதல் செய்தனர்.