ADDED : செப் 21, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.
கடலுார், துறைமுகத்தைச் சேர்ந்தவர் பலராமன்,66; மீன்பிடி தொழிலாளி. இவர், சோனங்குப்பத்தைச் சேர்ந்த விஜியகோபால் என்பவருடன் கடலுார் துறைமுகம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென பலராமனுக்கு நெஞ்சு வலி ஏற்படவே சக மீனவர்கள் அவரை கரைக்கு அழைத்து வந்தனர்.
பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், பலராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
புகாரின் பேரில், கடலுார், துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.