/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் போலி டாக்டரின் மருந்தகத்திற்கு 'சீல்'
/
சிதம்பரம் போலி டாக்டரின் மருந்தகத்திற்கு 'சீல்'
ADDED : அக் 26, 2024 08:23 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில், போலி டாக்டரின் மருந்தகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
சிதம்பரம் மந்தக்கரையில் சரவணன் என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில், சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு, மேல திருக்கழிப்பாளை கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் கவிமணி,22; இவர், 2 நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால், சிதம்பரம் மந்தக்கரையில் சரவணன் என்பவர் மருந்தகத்தில் நடத்தி வரும் கிளினிக் சென்று ஊசி போட்டுக் கொண்டார்.
வீட்டிற்கு சென்ற கவிமணி, திடீரென மயக்கம் ஏற்பட்டு இறந்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து, போலி டாக்டர் சரவணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மந்தக்கரையில் நடத்தி வந்த கிளினிக் மற்றும் மருந்தகத்திற்று நேற்று, தாசில்தார் ஹேமா ஆனந்தி, போலீஸ் பாதுகாப்புடன் 'சீல்' வைத்தார்.