/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்தவர்களுக்கும் 'டிரான்ஸ்பர்' சிதம்பரம் பல்கலை 'அசத்தல்'
/
இறந்தவர்களுக்கும் 'டிரான்ஸ்பர்' சிதம்பரம் பல்கலை 'அசத்தல்'
இறந்தவர்களுக்கும் 'டிரான்ஸ்பர்' சிதம்பரம் பல்கலை 'அசத்தல்'
இறந்தவர்களுக்கும் 'டிரான்ஸ்பர்' சிதம்பரம் பல்கலை 'அசத்தல்'
ADDED : அக் 16, 2025 02:10 AM
சிதம்பரம்: உயிரிழந்தவர்களுக்கும், டிரான்ஸ்பர் ஆர்டர் வழங்கி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அசத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. நிர்வாக சீர்கேடு காரணமாக, 2012ல் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது, ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து, 2013ம் ஆ ண்டு பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு ஏற்றது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக நியமி த்து, பல்கலைக்கழகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
முதற்கட்டமாக, பல்கலைக்கழகத்தில் மிகை பணியாளர்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பல்வேறு அரசு கல்லுாரிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதுவரையில், 7 ஆயிரம் பேர் பணி நிரவல் அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நி லையில், கடந்த மாதம், 374 உதவியாளர்கள், சென்னை தலைமை செயலகத்திற்கு, உதவி அலுவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். அந்த டிரான்ஸ்பர் ஆர்டரில் இடம் பெற்றுள்ள தியாகராஜன் என்பவர் இறந்து 5 மாதங்கள் ஆகிறது.
அதே போன்று, கடந்த வாரம் 300க்கும் மேற்பட்ட கடை நிலை ஊழியர்களுக்கு இட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
அதில், மின்துறை உதவியாளராக இருந்த அருள்முருகன் என்பவருக்கு, ஊட்டி தொழில்நுட்ப கல்லுா ரிக்கு இடமாற்றல் உத்தரவு போடப்பட்டுள்ளது.
அவர் இறந்தும், 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இது போல, இறந்த ஊழியர்களுக்கு இட மாறுதல் வழங்கி, பல்கலை நிர்வாகம் அசத்தி வருகிறது.