/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஏப் 03, 2025 08:20 AM

சிதம்பரம்; சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ரமா வரவேற்றார் காவலர் சரிதா முன்னிலை வகித்தார். சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கலைவாணி, பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். குழந்தை திருமணம், பாலியல் வன்முறைகளை எவ்வாறு தவிர்ப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஆசிரியர்கள் கோதைநாயகி , அனுராதா , இலக்கியா , ஒலிவட் மேரி ஜாஸ்மின் , சூர்யா, சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

