ADDED : மே 20, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : முன்விரோத தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசபெருமாள்,40; அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன,40; இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் மணிகண்டன், இவரது உறவினர் தங்கமணி, 42;செந்துாரபாண்டி ஆகிய மூவரும் சீனிவாசபெருமாள் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி வீட்டை கொளுத்தி விடுவதாக மிரட்டியதால் இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.
புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து மணிகண்டன், தங்கமணி, சீனிவாசபெருமாளை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.