ADDED : செப் 18, 2024 09:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகராட்சி சார்பில் துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு ஆகியோர் ஊர்வலத்தை துவங்கி வைத்தனர். கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி, பாரதி சாலை வழியாக டவுன் ஹால் வரை
சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை வந்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு துாய்மையே சேவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் துாய்மையே சேவை உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நகர் நல அலுவலர் எழில் மதனா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.