sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேர்தல் தொடர்பாக இந்தியா முழுவதும் 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடந்துள்ளது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

/

தேர்தல் தொடர்பாக இந்தியா முழுவதும் 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடந்துள்ளது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

தேர்தல் தொடர்பாக இந்தியா முழுவதும் 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடந்துள்ளது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

தேர்தல் தொடர்பாக இந்தியா முழுவதும் 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடந்துள்ளது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்


ADDED : மே 21, 2025 11:35 PM

Google News

ADDED : மே 21, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தேர்தல் தொடர்பாக இந்தியா முழுவதும் இதுவரை 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடைபெற்றுள்ளன என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் 13ம் தேதி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராடு சங்மாவுடன் கலந்துரையாடினர்.

பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் நடத்தும் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்துடன் நேரடியாக நடைபெறும் இக்கலந்துரையாடலில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆலோசனைகள். கருத்துகள் மற்றும் குறைகளை பகிர்வதற்கான வாய்ப்பு வழங்குவதன் மூலம் அரசியல் கட்சிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்த முயற்சி அனைத்து பங்குதாரர்களுடனும் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப தேர்தல் செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் ஆணையத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

முன்னதாக, மே 6ம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தலைமையிலான பிரதிநிதிகளையும், மே 8ம் தேதி அன்று பாரதிய ஜனதா கட்சி தலைவரான ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையிலான பிரதிநிதிகளையும், மே 10ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் பேபியையும் இந்திய தேர்தல் ஆணையம் சந்தித்தது.

இதற்கு முன்னர், இந்தியா முழுவதும் 4,719 அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளால் 40 கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் 800 கூட்டங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் 3,879 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் 28,000-க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us