ADDED : பிப் 02, 2025 05:02 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் 9.55 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடித்துவிட்டு, 5.75 கோடி ரூபாயில் இரண்டு தளங்களுடன் கூடிய புதிய அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார். அப்போது, பணியின் தரம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பணிகளை தரமாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரியகண்டியங்குப்பம் பகுதியில் 3.80 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை, உதவி செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்டார். பின்னர், தே.கோபுராபுரம் ஊராட்சி எல்லையில் எரிவாயு தகன மேடை அமையும் இடத்தை பார்வையிட்டார்.
அப்போது, கூடுதல் கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், பி.டி.ஓ., இப்ராஹிம், முன்னாள் ஊராட்சித் தலைவர் சாத்துக்கூடல் கீழ்பாதி சக்திவேல் உடனிருந்தனர்.