ADDED : மார் 08, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடலுார் மஞ்சக்குப்பம் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி கல்லுாரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

