ADDED : மார் 06, 2026 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் பிரேமா, 19; இவர் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி கல்லுாரி செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் ராஜேஸ்வரி கொடுத்த புகாாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, பிரேமாவை தேடி வருகின்றனர்.

