ADDED : ஜன 09, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பாக்கியம், முருகன், பொருளாளர் செல்வம், முன்னாள் மாவட்டக்குழு அரிகிருஷ்ணன், பாலு, வீரப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் குளோப், வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.