ADDED : ஏப் 09, 2025 07:06 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் பழங்குடியின மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில், துறை தலைவர் அரவிந்த்பாபு வரவேற்றார். துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி பேசினார்.
அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம், கலைப்புல முதல்வர் விஜயராணி வாழ்த்திப் பேசினர். பயிற்சி பெற்ற 43 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாலமுருகன் நன்றி கூறினார்.
