sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்

/

பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்

பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்

பிராது கட்டிய அமைச்சர் உடன்பிறப்புகள் குழப்பம்


ADDED : ஏப் 23, 2025 05:37 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பிராது கட்டி வேண்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா பிராது கட்டி, வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் இருந்த போது, மாஜி அமைச்சர் கோகுலஇந்திரா பிராது கட்டியதும், இரண்டாவது நாளில் ஜாமின் கிடைத்தது.

இதுபோல் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பிராது கட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 20ம் தேதி ராஜ கோபுரங்களுக்கு நடந்த பூமி பூஜை துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் கணேசன், திடீரென பிராது கட்டி, சுவாமி 'வேலை' கட்டிப்பிடித்து, மனமுருகி வேண்டினார்.

எதுவும் தெரியாமல் விழித்த தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடன் குழப்பத்திலேயே கோவிலை சுற்றி வந்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் அவப்பெயர் இல்லாத நிலையில், அமைச்சர் கணேசன் திடீரென பிராது கட்டியது, உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us