
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர காங்., சார்பில் மதநல்லிணக்க நடைபயணம் நடந்தது.
மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். விஷ்ணுபிரசாத் எம்.பி., தலைமையில் அக்கட்சியினர் நகரின் முக்கிய சாலை வழியாக வைடிபாக்கம் வரை மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் சென்றனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன் காங்., சார்பில் துவங்கிய நடைபயணம் முக்கிய வீதி வழியாக காந்தி பூங்கா அருகே முடிந்தது. மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.
வட்டார தலைவர்கள் குலோத்துங்க நடராஜன், அலெக்சாண்டர், பிரேமா கேசவன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முருகன் வரவேற்றார்.
விஷ்ணு பிரசாத் எம்.பி., நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

