ADDED : செப் 06, 2025 03:20 AM

அ நிறம் | அளவு
கடலுார்: 'தினமலர்' நாளிதழ் சமுதாயத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது என, எஸ்.பி.,ஜெயக்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஊடகத்துறையில் 74 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் சமுதாயத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. இளைய தலைமுறையினரை உயர வைத்து உயர்ந்து பார்க்கும் 'தினமலர்' மேலும் பல ஆண்டு காலம் சிறக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
