ADDED : ஏப் 02, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கள்ளக்குறிச்சியில் நடந்த ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற கடலுார் மாவட்ட ஆயுதப்படை காவலரை, எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டினார்.
மாநில அளவிலான ஆணழகன் போட்டி கள்ளக்குறிச்சியில் நடந்தது. இப்போட்டியில் கடலுார் மாவட்ட ஆயுதப்படை காவலர் விஷ்ணுபிரசாத், 85கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதனையொட்டி அவரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார். ஆயுதப்படை டி.எஸ்.பி., அப்பாண்டராஜ் உடனிருந்தார்.