
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், துாத்துக்குடி குலசேகரப்பட்டினம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விருத்தாசலம் பாலக்கரையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜன், மாநில செயலாளர் அன்பரசு, நகர தலைவர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட விவசாய பிரிவு ஜெயகுரு, நகர தலைவர்கள் கந்தசாமி, முருகன், ஸ்டீபன், வட்டார தலைவர்கள் சக்திவேல், சுரேஷ், சக்திவேல் ராஜன், முருகானந்தம், ராவணன், சாந்தகுமார், கலியபெருமாள், பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

